Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/மாதா அமிர்தனந்தமயி/பிறர் தவறைப் பொறுப்போமே!

பிறர் தவறைப் பொறுப்போமே!

பிறர் தவறைப் பொறுப்போமே!

பிறர் தவறைப் பொறுப்போமே!

ADDED : பிப் 21, 2012 10:02 AM


Google News
Latest Tamil News
* நாம் எச்செயலை செய்தாலும் இறைவனுக்கு அர்ப்பணம் என்ற உணர்வோடு செய்தால், விதிப்பயன் நம்மைப் பாதிப்பதில்லை.

* வசந்தம், வேனில், இலையுதிர், மழை, குளிர், பனி என காலங்கள் சுழற்சி அடிப்படையில் வருகின்றன. இறைவனின் அமைப்பில் எந்த ஒரு நிகழ்வும் நியதிப்படியே நடக்கிறது.

* கால் தடுக்கி விழுந்த ஒருவன், தனக்கு சரியாக வழிகாட்டவில்லையே என்று தன் கண்களின் மீது கோபித்து, அதை பறிக்கமாட்டான். ஒருவன் தன் கண் செய்த குற்றத்தைப் பொறுத்துக் கொள்வது போல், பிறர் செய்த தவறையும் பொறுத்துக் கொள்ள வேண்டும்.

* மன அமைதியை இழக்க காரணம் எங்கு சென்றாலும் குற்றம் குறைகளை காண்பது தான். இந்த குணத்தை மாற்றி, நல்ல விஷயங்களை மட்டுமே சிந்திக்கும் உயர்ந்த மனோபாவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

* பணமே வேண்டாம் என்று சொல்லவில்லை. நம்மிடம் இருக்கும் பணத்தின் மதிப்பையும், பயனையும் புரிந்து கொண்டால் இன்பமும் அமைதியும் பெறலாம்.

- மாதா அமிர்தானந்தமயி





      Our Apps Available On




      Dinamalar

      Follow us